தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது | தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு |
இயக்குனர் பாண்டிராஜ் கடைசியாக சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தை இயக்கினார். வியாபார ரீதியாக சரியாக போகாத, அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. அதற்கடுத்து விஷால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதற்கான வேலைகள் மேற்கொண்டு நடக்கவில்லை.
இதனிடையே, நடிகர் ஜெயம் ரவியிடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். அந்தக் கதை ரவிக்குப் பிடித்துவிடவே அதை தனது மாமியாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமாரிடம் தெரிவித்திருக்கிறார். 'சைரன்' பட நஷ்டத்திற்காக அவர்களுக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்துத் தருவதாக சொல்லியிருந்தாராம் ரவி. அவர்களும் இந்த புதிய கூட்டணிக்கு சம்மதம் சொல்லியிருக்கிறார்கள்.
ஜெயம் ரவி தற்போது 'ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அவரது அண்ணன் இயக்கத்தில் 'தனி ஒருவன் 2' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளது. எனவே, பாண்டிராஜ் படத்தை உடனடியாக ஆரம்பிக்க உள்ளார்களாம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.