இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
இயக்குனர் பாண்டிராஜ் கடைசியாக சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தை இயக்கினார். வியாபார ரீதியாக சரியாக போகாத, அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. அதற்கடுத்து விஷால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதற்கான வேலைகள் மேற்கொண்டு நடக்கவில்லை.
இதனிடையே, நடிகர் ஜெயம் ரவியிடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். அந்தக் கதை ரவிக்குப் பிடித்துவிடவே அதை தனது மாமியாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமாரிடம் தெரிவித்திருக்கிறார். 'சைரன்' பட நஷ்டத்திற்காக அவர்களுக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்துத் தருவதாக சொல்லியிருந்தாராம் ரவி. அவர்களும் இந்த புதிய கூட்டணிக்கு சம்மதம் சொல்லியிருக்கிறார்கள்.
ஜெயம் ரவி தற்போது 'ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அவரது அண்ணன் இயக்கத்தில் 'தனி ஒருவன் 2' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளது. எனவே, பாண்டிராஜ் படத்தை உடனடியாக ஆரம்பிக்க உள்ளார்களாம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.