நல்ல கதைக்காக காத்திருந்தது தவறான முடிவு : ஜெய் | சூர்யா பரிசாக கொடுத்த கார் விலை தெரியுமா? | ஆளே மாறிய 'அங்கீகாரம்' ஹீரோ | அந்த இரண்டு பேரை பாட வைப்பது கஷ்டம்: இசைநிகழ்ச்சியில் இளையராஜா சொன்ன தகவல் | முதல் வார இறுதியில் 20 கோடி வசூலித்த 'பிளாஸ்ட்' | பிளாஷ்பேக்: கார்த்திக்கிற்கு 2வது திருமணம் செய்து வைத்த கேயார் | கதையின் நாயகனாக பாலாஜி சக்திவேல் | குதிரை ரேஸ் பின்னணியில் உருவாகும் படம் | இளையராஜாவுடன் இணைந்த இயக்குனர்கள் : ஆர்வ மிகுதியில் ரசிகர்கள் | சினிமாவாகும் சல்மான் கானின் மான் வேட்டை |

இயக்குனர் பாண்டிராஜ் கடைசியாக சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தை இயக்கினார். வியாபார ரீதியாக சரியாக போகாத, அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. அதற்கடுத்து விஷால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதற்கான வேலைகள் மேற்கொண்டு நடக்கவில்லை.
இதனிடையே, நடிகர் ஜெயம் ரவியிடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். அந்தக் கதை ரவிக்குப் பிடித்துவிடவே அதை தனது மாமியாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமாரிடம் தெரிவித்திருக்கிறார். 'சைரன்' பட நஷ்டத்திற்காக அவர்களுக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்துத் தருவதாக சொல்லியிருந்தாராம் ரவி. அவர்களும் இந்த புதிய கூட்டணிக்கு சம்மதம் சொல்லியிருக்கிறார்கள்.
ஜெயம் ரவி தற்போது 'ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அவரது அண்ணன் இயக்கத்தில் 'தனி ஒருவன் 2' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளது. எனவே, பாண்டிராஜ் படத்தை உடனடியாக ஆரம்பிக்க உள்ளார்களாம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.




