2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுகளாக இசை ஆதிக்கம் செலுத்திய டி.எம்.சவுந்தர்ராஜன். அன்றைக்கு இருந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். “சிவாஜி நடிப்பில் பெயர் பெற்றதற்கும், எம்.ஜி.ஆர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதற்கும் நான் பாடிய பாடல்கள்தான் காரணம்” என்று டி.எம்.சவுந்தராஜனே சொல்லியிருக்கிறார்.
டி.எம்.எஸ், எம்ஜிஆருக்கு பாடினால் அவர் பாடுவது போன்று இருக்கும், சிவாஜிக்கு பாடினால் அவர் பாடுவது போன்றே இருக்கும். இருவருக்கும் தனித்தனியாக குரலில் பாடுகிறார் என்று ரொம்ப காலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இதனை டி.எம்.எஸ் மறுத்தார்.
மதுரையில் நடந்த ஒரு இசை விழாவில் இதுகுறித்து பேசும்போது, “நான் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் தனித்தனி குரலில் பாடுவதாக பேசப்படுவதில் உண்மையில்லை. இருவருக்கும் ஒரே குரலில்தான் பாடுகிறேன். அவர்கள் என்ன கேரக்டரில் நடிக்கிறார்கள், எந்த மாதிரியான சூழலில் அந்த பாடல் வருகிறது என்பதை உள்வாங்கி பாடுவதால் அந்த கேரக்டர் பாடுவது போன்று இருக்கும், அதாவது எம்ஜிஆர், சிவாஜி பாடுவது போன்று இருக்கும்” என்றார்.
இன்று அவரது 11வது நினைவுநாள்.