பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

பழம்பெறும் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இருபெரும் கலைஞர்களை தனது வசீகர குரலால் தாங்கிப் பிடித்தவர், 10 ஆயிரம் திரைப்பட பாடல்களையும், 2500 பக்தி பாடல்களையும் பாடி உள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரின் நூற்றாண்டை போற்றும் விதமாக சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்ட தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று பெயர் மாற்றம் செய்து அரசாணையும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அவரின் பிறந்ததினமான இன்று(மார்ச் 24) அவர் பெயரில் சாலை திறந்து வைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் டிஎம்எஸ்., குடும்பத்தினரும் பங்கேற்றனர்.