மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கடந்த 19ம் தேதி நடந்த போதை விருந்தில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் தெலுங்கு நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள், ஐ.டி. ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் இந்த போதை விருந்தில் பங்கேற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியை ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரான வாசுவும் தெலுங்கு நடிகை ஹேமாவும் இணைந்து ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை ஹேமா வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதேபோல் மற்றொரு தெலுங்கு நடிகை ஆஷா ராயும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நான் சம்பவத்தன்று பண்ணை வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால் அங்கு போதைவிருந்து நடைபெற்றது குறித்து எனக்கு தெரியாது என்று கூறி இருந்தார்.
ஆனால் இந்த மது விருந்தில் நடிகை ஹேமா, ஆஷா ராய் உள்ளிட்ட சில தெலுங்கு நடிகைகள் பங்கேற்றுள்ளது போலீஸ் விசாரணையில் உறுதியாகி உள்ளது. இதை தொடர்ந்து நடிகைகள் ஹேமா, ஆஷா ராய் உள்ளிட்ட 86 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பிறகு அவர்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.