'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் |
இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா. ஆனால், சமீப காலங்களில் சர்ச்சைக்குரிய படங்களை மட்டுமே எடுத்து வருகிறார். அவருடைய பழைய திறமையை தற்போது பார்க்க முடிவதில்லை.
தமிழ் நடிகரான விஜய் சேதுபதியை, ராம் கோபால் வர்மா சந்தித்துள்ளார். அந்த சந்திப்புக்குப் பின், “அவரை திரையில் பல முறை பார்த்ததற்குப் பிறகு, கடைசியாக நிஜ விஜய் சேதுபதியை நேரில் சந்தித்தேன். அவர் திரையில் இருப்பதை விட நேரில் நல்லவராக இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.
சென்னையில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ராம்கோபால் வர்மா, விஜய் சேதுபதியை நேரில் வந்து சந்தித்துள்ளது ஆச்சரியமான ஒன்று. இருவரும் இணைந்து புதிய படம் எதையும் செய்யப் போகிறார்களா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.