நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படம் 'சலார்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளிவந்தது.
சுமார் 300 கோடி செலவில் தயாரானதாக சொல்லப்பட்ட இந்தப் படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எதிர்பார்த்த அளவு வசூலில் பெரிய சாதனை எதையும் படைக்கவில்லை.
முதல் பாகம், 'சலார் 1 - சீஸ்பயர்' என வெளிவந்தது. அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கி 2025ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். இந்தப் படத்தை முடித்த பிறகு ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை பிரசாந்த் நீல் இயக்கப் போவதாக இருந்தது.
இந்நிலையில் இன்று ஜுனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் இணையும் படம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது என அறிவித்துள்ளார்கள். இதனால், 'சலார் 2' படம் டிராப் ஆகிறதா என டோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
'சலார் 2' படத்திற்கு அதிக முதலீடு செய்ய தயாரிப்பாளர் தயங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தகவல்.