சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படம் 'சலார்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளிவந்தது.
சுமார் 300 கோடி செலவில் தயாரானதாக சொல்லப்பட்ட இந்தப் படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எதிர்பார்த்த அளவு வசூலில் பெரிய சாதனை எதையும் படைக்கவில்லை.
முதல் பாகம், 'சலார் 1 - சீஸ்பயர்' என வெளிவந்தது. அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கி 2025ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். இந்தப் படத்தை முடித்த பிறகு ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை பிரசாந்த் நீல் இயக்கப் போவதாக இருந்தது.
இந்நிலையில் இன்று ஜுனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் இணையும் படம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது என அறிவித்துள்ளார்கள். இதனால், 'சலார் 2' படம் டிராப் ஆகிறதா என டோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
'சலார் 2' படத்திற்கு அதிக முதலீடு செய்ய தயாரிப்பாளர் தயங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தகவல்.