ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படம் 'சலார்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளிவந்தது.
சுமார் 300 கோடி செலவில் தயாரானதாக சொல்லப்பட்ட இந்தப் படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எதிர்பார்த்த அளவு வசூலில் பெரிய சாதனை எதையும் படைக்கவில்லை.
முதல் பாகம், 'சலார் 1 - சீஸ்பயர்' என வெளிவந்தது. அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கி 2025ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். இந்தப் படத்தை முடித்த பிறகு ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை பிரசாந்த் நீல் இயக்கப் போவதாக இருந்தது.
இந்நிலையில் இன்று ஜுனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் இணையும் படம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது என அறிவித்துள்ளார்கள். இதனால், 'சலார் 2' படம் டிராப் ஆகிறதா என டோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
'சலார் 2' படத்திற்கு அதிக முதலீடு செய்ய தயாரிப்பாளர் தயங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தகவல்.




