எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? | 98வது ஆஸ்கர் : 6 விருதுகளை குவித்த ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' | மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ? | ஆன்லைன் மோதல், ரசிகர்கள் சண்டை வேண்டாம் - பவன் கல்யாண் அட்வைஸ் | 10 நாட்கள் நடித்த நிலையில் கமல் வெளியேறியதால் நின்று போன படம் ; இயக்குனர் பாலச்சந்திர மேனன் புது தகவல் | ‛மகாராஜா 2' கதை தயார் ; உறுதிப்படுத்திய விஜய்சேதுபதி | இரண்டாவதாக பெண் குழந்தை பெற்ற பூர்ணா ; பிறந்த நாளன்றே பெயரும் சூட்டினார் | ‛ஆடுஜீவிதம்' இயக்குனர் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட மோகன்லால் நெகிழ்ச்சி |

விஜய் கார்த்திகேயா இயக்கத்தில், கிச்சா சுதீப், வரலட்சுமி, சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கும் கன்னடப் படம் 'மேக்ஸ்'. இப்படத்தைத் தமிழ் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
கடந்த பத்து மாதங்களாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் தற்போது முடிவடைந்துள்ளது. இது குறித்து வீடியோ பதிவு ஒன்றுடன் படப்பிடிப்பு முடிந்தது பற்றி சுதீப் பதிவிட்டுள்ளார்.
“மகாபலிபுரத்தில் 'மேக்ஸ்' படப்பிடிப்பு முடிவடைந்தது. 10 மாதங்கள் நீண்ட பயணம் இது, அதன் ஒவ்வொரு பகுதியையும் ரசித்தேன். செட்டில் அற்புதமான குழுவினர் அன்பான நடிகர்கள் இருந்தனர். என்னை சிறப்பாக நடத்தியதற்கு நன்றி தாணு சார். விஜய் மற்றும் மொத்த குழுவினருக்கும் ஒட்டு மொத்த நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




