சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
நிதிஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராமாயணா'. இப்படத்தை முதலில் மது மந்தெனா, அல்லு அரவிந்த், நமித் மல்கோத்ரா மற்றும் பலர் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால், மது மந்தெனா, அல்லு அரவிந்த் இப்படத் தயாரிப்பிலிருந்து விலகிவிட்டனர்.
இந்நிலையில் மது மந்தெனா இப்படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கான மொத்த உரிமையும் தங்களிடம்தான் உள்ளது. அதை வாங்குவதற்காக பிரைம் போகஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் இன்னும் முடிவு பெறாமல் உள்ளது. எனவே, தங்களது அனுமதி பெறாமல் இப்படம் குறித்த எதையும் செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் இப்படத்தில் தன்னை இணை தயாரிப்பாளராக இணைத்துக் கொண்டார் கன்னட நடிகர் யஷ். படத்தில் இவர்தான் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரும் நமித் மல்கோத்ரா இருவரும் இணைந்துதான் தற்போது படத்தைத் தயாரித்து வருகின்றனர்.