பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 171வது படத்தின் தலைப்பு 'கூலி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான தலைப்பு அறிவிப்பு வீடியோ சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு தங்க குடோனில் சிலர் தங்கத்தையும், ஆபரணங்களையும் அடுக்கிக் கொண்டிருக்க அங்கு அதிரடியாக என்ட்ரி கொடுத்து அவர்களை அடித்துப் போட்டு அந்த தங்கக் கட்டிகள் மீது ஹாயாக படுத்துக் கொண்டு சிரிக்கிறார் ரஜினி. அவரது வருகையை யாரோ ஒருவர் போனில் சொல்ல, கடைசியில் அவரிடமே போனில் பேசி ரஜினி சிரிக்கும் அந்த சிரிப்பு வில்லன் சிரிப்பா, நாயகன் சிரிப்பா என பட்டிமன்றம் நடத்த வேண்டும்.
'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் இடம் பெற்ற பாடலான 'சம்போ சிவசம்போ' பாடலில் இடம் பெற்ற கண்ணதாசனின் வரிகளான...
“அப்பாவும் தாத்தாவும்
வந்தார்கள் போனார்கள்..!!
தப்பென்ன சரியென்ன
எப்போதும் விளையாடு..!!
அடப்பாவி என்பார்கள்
தப்பாக நினைக்காதே..!!
எப்பாதை போனாலும்
இன்பத்தை தள்ளாதே..!!
சோறுண்டு, சுகமுண்டு..
மதுவுண்டு மாதுண்டு..
சோறுண்டு
சுகமுண்டு மனமுண்டு என்றாலே
சொர்க்கத்தில் இடம் உண்டு...
போடா,”
என்ற வசனம் பேசி அந்த அடியாட்களைப் பந்தாடுகிறார். வசனம் பேசி முடித்த பின், ரஜினி, பூர்ணிமா ஜெயராம் நடித்து வெளிவந்த 'தங்கமகன்' படத்தில் இடம் பெற்ற இளையராஜா இசையமைப்பில், வந்த ''வா வா பக்கம் வா” பாடலை பயன்படுத்தியுள்ளார் அனிருத்.
இதற்கான வீடியோவில் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
80களின் பாடல் வசனம், 80களின் பாடலின் பின்னணி இசை என 'ரெட்ரோ' டைப்பில் அந்தக் கால ரஜினியைப் பார்த்த பரவசத்தை ஏற்படுத்துகிறது இந்த வீடியோ.
டைட்டில் லுக் வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=6xqNk5Sf5jo