Advertisement

சிறப்புச்செய்திகள்

நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

70 வருடங்களைக் கடந்த 'அந்த நாள்'

13 ஏப், 2024 - 03:17 IST
எழுத்தின் அளவு:
70-years-since-that-day

கிரைம் திரில்லர் படங்கள் என்பது இந்தக் காலத்தில் அதிகம் ரசிக்கப்படும் ஒரு படமாக இருக்கிறது. எந்த மொழிப் படங்களாக இருந்தாலும் ஓடிடி தளங்களில் அம்மாதிரியான படங்களைத்தான் அதிகம் பார்க்கிறார்கள் என்ற ஒரு தகவலும் உண்டு.

தமிழ் சினிமாவில் 70 வருடங்களுக்கு முன்பே அதிரடியான ஒரு கிரைம் திரில்லர் படத்தை வெளியிட்டுள்ளார்கள். அப்படத்தின் பெயர் 'அந்த நாள்'. அப்படம் வெளியாகி இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. பிரபல வீணை இசைக்கலைஞரான எஸ்.பாலசந்தர் இயக்கிய படம். சிவாஜிகணேசன், பண்டரிபாய் மற்றும் பலர் நடித்த படம்.

பிரபல ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசோவாவின் 'ரசோமன்' படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. ஏவிஎம் நிறுவன தயாரிப்பாளர் ஏவி மெய்யப்பன், ஜப்பான் சென்றிருந்த போது அந்தப் படத்தைப் பார்த்தார். அப்படியான புதுமையுடன் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இப்படத்தில் கதாநாயகன் சிவாஜி கதாபாத்திரம் வெளிநாட்டு உளவாளி. அவரது மனைவி பண்டரிபாய் நாட்டுப்பற்று மிக்கவர். கணவன் சிவாஜியைக் கொன்றதற்காக நீதிமன்றக் கூண்டில் பண்டரிபாய் நிற்பார். சாட்சிகள் என்ன நடந்தது என்பதைச் சொல்லும் பாணியில் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும்.

தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம். சிவாஜியின் காதலியாக சூர்யகலா, சிஐடி அதிகாரியாக படத்திற்குக் கதை எழுதிய ஜாவர் சீதாராமன் நடித்திருந்தார்கள்.

சுமார் 20 நாட்களுக்குள் எடுத்து முடிக்கப்பட்ட படம். ஆனால், வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும் தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறப்பான முதல் திரில்லர் படம் என்ற பெருமையை 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்படம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாளை 'தி கோட்' முதல் சிங்கிள் : ஆர் யு ரெடிநாளை 'தி கோட்' முதல் சிங்கிள் : ஆர் ... 'ஜெயிலர்' இரண்டாம் பாகத்திற்கு தலைப்பு வச்சிட்டாங்களா? 'ஜெயிலர்' இரண்டாம் பாகத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in