டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கிரைம் திரில்லர் படங்கள் என்பது இந்தக் காலத்தில் அதிகம் ரசிக்கப்படும் ஒரு படமாக இருக்கிறது. எந்த மொழிப் படங்களாக இருந்தாலும் ஓடிடி தளங்களில் அம்மாதிரியான படங்களைத்தான் அதிகம் பார்க்கிறார்கள் என்ற ஒரு தகவலும் உண்டு.
தமிழ் சினிமாவில் 70 வருடங்களுக்கு முன்பே அதிரடியான ஒரு கிரைம் திரில்லர் படத்தை வெளியிட்டுள்ளார்கள். அப்படத்தின் பெயர் 'அந்த நாள்'. அப்படம் வெளியாகி இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. பிரபல வீணை இசைக்கலைஞரான எஸ்.பாலசந்தர் இயக்கிய படம். சிவாஜிகணேசன், பண்டரிபாய் மற்றும் பலர் நடித்த படம்.
பிரபல ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசோவாவின் 'ரசோமன்' படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. ஏவிஎம் நிறுவன தயாரிப்பாளர் ஏவி மெய்யப்பன், ஜப்பான் சென்றிருந்த போது அந்தப் படத்தைப் பார்த்தார். அப்படியான புதுமையுடன் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
இப்படத்தில் கதாநாயகன் சிவாஜி கதாபாத்திரம் வெளிநாட்டு உளவாளி. அவரது மனைவி பண்டரிபாய் நாட்டுப்பற்று மிக்கவர். கணவன் சிவாஜியைக் கொன்றதற்காக நீதிமன்றக் கூண்டில் பண்டரிபாய் நிற்பார். சாட்சிகள் என்ன நடந்தது என்பதைச் சொல்லும் பாணியில் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும்.
தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம். சிவாஜியின் காதலியாக சூர்யகலா, சிஐடி அதிகாரியாக படத்திற்குக் கதை எழுதிய ஜாவர் சீதாராமன் நடித்திருந்தார்கள்.
சுமார் 20 நாட்களுக்குள் எடுத்து முடிக்கப்பட்ட படம். ஆனால், வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும் தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறப்பான முதல் திரில்லர் படம் என்ற பெருமையை 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்படம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.