கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
துபாய் : 2016 ஆண்டு முதல் தொடர்ச்சியாக அமீரக தமிழர்களின் மேடை நாடக ஆர்வத்தை வளர்த்து வரும் அமீரக குறுநாடக குழுவினர், கொரோனா பீதி சமயத்தில் மேடைகள் தடை செய்யப்பட்ட காரணத்தால் குறும்படங்கள் இயக்க தங்கள் குழுவினரை ஊக்குவித்தனர்.
2020ம் ஆண்டு முதல் தற்போது நான்காம் ஆண்டாக நடைபெறப்போகும் இவ்விழாவில் பங்கு கொள்ள அமீரகத் தமிழர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டனர். தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரமும், தொலைக்காட்சி தயாரிப்பில் முன்னோடிகளில் ஒருவருமான நடிகை குட்டி பத்மினி நடுவராக இந்த விழாவிற்கு தலைமையேற்கிறார்.
35க்கும் மேற்பட்ட குறும்படங்கள் இதில் பங்கேற்க உள்ளனர். படங்கள் திரையிடப்படும் தேர்வு வரிசையை வீடியோ மூலம் வெளியிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கபடுத்தினார் நடுவர். பதிவு முறை மூலம் மட்டுமே, 13ம் தேதி குட்டி பத்மினி அவர்களை நேரில் சந்தித்து உரையாடவும், ஏப்ரல் 14 காலை படங்களை பார்க்கவும் இயலும்.
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த குறும் படங்கள் வெளியிடப்பட்டு அன்று மாலையே வெற்றியாளர்களுக்கு 12 பிரிவில் 28 வகையான பரிசுகளும், பங்கு கொண்டவர்களுக்கு நினைவு சின்னமும் வழங்கப்படும் என நிகழ்ச்சி அமைப்பாளர் ஆனந்த் மற்றும் ரமா மலர் தெரிவித்தனர்.