2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா | ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட் | ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா? | எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில் | 25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி' | ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‛ஹிட்டன் கேமரா' | 100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் |
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை அடைத்த லைகா நிறுவனம், கடனை திருப்பி செலுத்தும் வகையில் விஷால் நடிக்கும் படத்தின் சம்பளம், அவர் தயாரிக்கும் படத்தின் உரிமைகளை தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்த ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாததால் லைகா நிறுவனம் விஷால் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக விஷால் தற்போது நடித்து வரும் 'ரத்னம்' படத்திற்காக விஷாஷக்கு வழங்க வேண்டிய 2 கோடியே 60 லட்சம் சம்பள நிலுவை தொகையை நீதிமன்றத்தில் செலுத்துமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷாலின் மனுவுக்கு பதிலளிக்க லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
விஷால் நடிக்கும் 'ரத்னம்' படத்தை ஹரி இயக்குகிறார். ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் தயாரிக்கிறது. விஷாலுடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரகினி, கவுதம் மேனன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் வருகிற ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்காக விஷாலுக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.