ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
இந்திய சினிமாவில் முதல் புகழ் பெற்ற நடிகை என்றால் அது தேவிகா ராணிதான். 1908ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் பிறந்த இவர் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை ராணுவ அதிகாரி. பெரிய கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். அவரது முன்னோர்கள் ஆங்கில அரசில் பெரிய பதவியில் இருந்தவர்கள். கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் உறவினர்.
லண்டனில் படித்த தேவிகா ராணி. பள்ளி படிப்பு முடிந்ததும் நடிப்பு, நடனம் கற்றார். இவரது கணவர் சினிமா தயாரிப்பாளர் என்பதால் அவருடன் இவரும் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டார். சில குறும்படங்களை இயக்கினார். ஆங்கிலம், ஹிந்தியில் 'கர்மா' என்ற முதல் பேசும்படத்தை தயாரித்தார். இந்த படத்தில் அவர் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் லிப்லாக் முத்தக்காட்சி இடம்பெற்று அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய சினிமாவில் முதல் லிப் லாக் முத்தக்காட்சி இது.
அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்த தேவிகா ராணி சொந்தமாக ஸ்டூடியோ கட்டினார், தியேட்டர் கட்டினார், சினிமாவின் அத்தனை பணியிலும் ஈடுபட்ட தேவிகா ராணி இந்திய சினிமாவின் முதல் பெண் ஆளுமை என்று போற்றப்படுகிறார். இந்திய சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை முதலில் பெற்றவரும் இவர்தான். இன்று தேவிகா ராணியின் 116வது பிறந்த நாள்.