23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
இலங்கையில் செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. அதேபோல வானொலி அறிவிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா பற்றியும் படங்கள் வந்திருக்கிறது. தற்போது இந்த அமைப்பின் அடுத்த கட்ட தலைவர்கள் பற்றிய படம் தயாராகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதியாக இருந்த பிரிகேடியர் பால்ராஜ் மற்றும் பிரிகேடியர் தமிழினி ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து 'செஞ்சமர்' என்ற படம் தயாராகிறது. இதில் ஜெகநாதன், முருகன், பகலவன், குட்டி ராதிகா, சாக்ஷி அகர்வால், மைம் கோபி, ரஞ்சன், கீர்த்தனா, விஷ்வா, சதீஷ், சஞ்சய் ஆகியோர் நடித்துள்ளனர். சி.ஜி.எம்.பிக்சர்ஸ் சார்பில் மணிவண்ணன் தயாரிக்கிறார்.
அதிரை தமீம் அன்சாரி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது ''இலங்கையில் இறுதிப்போருக்கு பின் தொலைந்து போன தமிழர்கள் என்ன ஆனார்கள்? திரும்பி வருவார்களா? என்ற ஆய்வை செய்ய இலங்கைக்கு ஐ.நா. போக வேண்டுமா? வேண்டாமா? என்ற போராட்டத்தோடு படம் தொடங்குகிறது. குறிப்பாக பிரிகேடியர் பால்ராஜ், தமிழினி பற்றியும் படம் பேசுகிறது.
இறுதி போருக்கு முன்னால் தமிழ் மக்கள் மற்றும் விடுதலை போராளிகளின் வாழ்வியல் எப்படி இருந்தது? என்பதையும் படம் அலசும். இந்த படம் இலங்கை தமிழர் வாழ்வுரிமை போராட்டத்தை உலக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும்'' என்றார்.