அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், கமல் நடிக்கும் தக் லைப் என்கிற படத்தை இயக்கி வருகிறார். நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணையும் படம் இது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கால்சீட் பிரச்சினை காரணமாக சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக சொல்லப்பட்டது.
இதேபோன்றுதான் தற்போது ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதாக இன்னொரு தகவலும் கசிந்துள்ளது. இவர்கள் இருவருமே ஏற்கனவே மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்து புகழ் பெற்றவர்கள் தான். இந்த நிலையில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சிம்பு இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இப்போது ஜெயம் ரவி கதாபாத்திரத்தின் நடிப்பதற்காக நடிகர் நிவின்பாலியும் இந்த படத்தில் இணைய உள்ளார் என்கிற புதிய தகவலும் வெளியாகி உள்ளது.
சிம்புவும் ஏற்கனவே மணிரத்னம் படத்தில் நடித்தவர் என்பதாலும் தற்போது கமல் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் அவர் நடித்து வருவதாலும் தக் லைப் படத்திற்கு ஏற்றவாறு அவரது தேதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என கமல், மணிரத்தினம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.