சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் உருவாகி தென்னிந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. கன்னடத்தில் இருந்து வெளியான 'கேஜிஎப்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற காந்தாரா திரைப்படத்தின் மூலம் படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான ரிஷப் ஷெட்டியும் தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட் வரை பிரபலமான நடிகர் ஆகிவிட்டார். அடுத்ததாக அவர் 'காந்தாரா லெஜன்ட் ; சாப்டர் 1' என்கிற பெயரில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இதற்கான பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்த படம் காந்தாரா படத்தின் பிரீக்வல் அதாவது முன் கதையாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க இருக்கிறார்கள் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் நடிகை ருக்மணி வசந்த் இதில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இவர்தான் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது மட்டுமல்ல விஜய்சேதுபதியின் 51 வது படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.