'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
'ஜவான்' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனரானார் அட்லீ. ரூ.1100 கோடி வசூலை தனது முதல் ஹிந்திப் படத்திலேயே கொடுத்து அசத்தினார். அடுத்து அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
அட்லீயின் சம்பளம் 60 கோடி, அவரது குருநாதர் ஷங்கரை விடஅதிக சம்பளம் என்று சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. அடுத்த புதிய தகவலாக படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளாராம். அவருக்கும் 'ஜவான்' படத்தை விடவும் அதிக சம்பளம் என்கிறார்கள். ஏற்கனவே இதுதொடர்பான தகவல் வெளியான நிலையில் தற்போது பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் இந்த கூட்டணி அமைவது உறுதி தான் என்கிறார்கள்.
அல்லு அர்ஜுன், அட்லீ, அனிருத் என 'அ-அ-அ' கூட்டணியாக பான் இந்தியா கூட்டணியாக உருவாக உள்ள இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அனிருத் தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் 'தேவரா' படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதுவும் ஒரு பான் இந்தியா படம்தான்.
இந்தப் புதிய கூட்டணி அமைந்தால் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் பேசப்படலாம்.