தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து |
அயலான் படத்திற்கு பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‛அமரன்' படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல் தயாரிக்கும் இந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். அனிரூத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. முருகதாஸ் அடுத்து சல்மான்கான் படத்தை இயக்க போகிறார். அதனால் இந்த படத்தை விரைவாக முடிக்க திட்டமிட்டு அதற்கு ஏற்றபடி படப்பிடிப்பையும் தீவிரமாக நடத்தி வருகிறார். எப்படியும் இப்படத்தை இந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.