Advertisement

சிறப்புச்செய்திகள்

தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரசிகரின் வேண்டுகோளை ஏற்று கேரளா வரச் சொன்ன ‛மின்னல் முரளி' இயக்குனர்

29 பிப், 2024 - 11:47 IST
எழுத்தின் அளவு:
The-director-of-Minnal-Murali-asked-to-come-to-Kerala-on-the-request-of-a-fan
Advertisement

மலையாள திரை உலகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சூப்பர்மேன் கதையம்சம் கொண்ட 'மின்னல் முரளி' என்கிற படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவரும் சூப்பர்மேன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் பசில் ஜோசப் இயக்கியிருந்தார். இதற்கு முன்பு அவர் இரண்டு படங்களை இயக்கி இருந்தாலும் இந்த படத்தின் மூலம் இன்னும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். மேலும் ஒரு பிசியான நடிகராகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ரசிகர், “நான் இங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சொந்த ஊருக்கு (கேரளா) வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. என்னுடைய இந்த வீடியோவை பார்த்துவிட்டு இதில் இயக்குனர் பசில் ஜோசப் ஒரு கமெண்ட் பதிவிட்டால் நான் உடனடியாக ஊருக்கு வர டிக்கெட் புக் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

இது பசில் ஜோசப்பின் கவனத்திற்கு சென்றதும், “திரும்பி வா மகனே” என அதில் தனது கமெண்ட்டை பதிவிட்டுள்ளார். இவர் இப்படி கமெண்ட் வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த வீடியோவின் கீழ் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் தங்களது கமெண்ட்டுகளை பதிவிட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவர் நடிகர் டொவினோ தாமஸிடம், “நீங்கள் என்னுடைய பதிவில் கமெண்ட் இட்டால் நான் படிக்கத் துவங்குவேன்” என்று கூறியிருந்தார். “போய் படி மகனே” என்று அதற்கு பதில் அளித்து இருந்தார் டொவினோ தாமஸ்.

அதேபோல சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் சில மாணவர்கள் ஒன்றாக வீடியோ வெளியிட்டு, எங்களது வீடியோவிற்கு நீங்கள் கமெண்ட் செய்தால் நாங்கள் நிறைய மதிப்பெண்கள் வாங்குவதற்கு படிக்க துவங்குவோம் என்று கூறியிருந்தனர். அவரும் பதிலுக்கு, “நன்றாக படியுங்கள்.. என்னை நேரிலேயே சந்திக்கலாம்” என்று உற்சாகப்படுத்தி பதில் கூறியிருந்தார்.

இதுபோன்று தங்களது அபிமான நடிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ரசிகர்கள் பலரும் இப்படி வித்தியாசமாக யோசித்து களத்தில் இறங்கி உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில்  பாராட்டு விழாசிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் ... ரியல் மஞ்சும்மேல் பாய்ஸும் படத்தில் இருக்கிறார்கள் : இயக்குனர் வெளியிட்ட தகவல் ரியல் மஞ்சும்மேல் பாய்ஸும் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !