திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஜீவா ஒளிப்பதிவாளராக இந்தியன், ஜென்டில்மேன், வாலி போன்ற முக்கிய படங்களில் பணியாற்றியவர். 12பி, உன்னாலே உன்னாலே, தாம் தூம் போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். பின்னர் அவர் உடல்நலக் குறைவால் காலமானார்.
தற்போது ஜீவாவின் மகள் சனா மரியம் இயக்குனர் ஆக அறிமுகமாக உள்ளார். இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் சிறு வயது விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்த சந்தோஷ் மற்றும் சிறு வயது ஐஸ்வர்யா ராயாக நடித்த சாரா அர்ஜுன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை சுந்தர்.சி, குஷ்பு தயாரிப்பு நிறுவனமான அவனி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.




