அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த வருடம் வெளியாகி 600 கோடி வசூலைக் குவித்த படம் ஜெயிலர். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே ஒரு தகவல் இருந்தது. அந்தத் தகவல் உண்மைதான் என தற்போது தெரிய வந்துள்ளது. அப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த மிர்னா இது பற்றிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சனுடன் பேசியதாகவும், அப்போது நெல்சன் ஜெயிலர் 2 படத்திற்கான கதையை எழுதி வருவதாக சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் தன்னுடைய கதாபாத்திரம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது இயக்குனரின் முடிவு சார்ந்த ஒரு விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அப்படம் முடிந்தபின் ரஜினியின் 172வது படமாக ஜெயிலர் 2 படம் உருவாகலாம்.