இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே |

சின்னத்திரை நடிகர்களில் ஜோடியாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளனர் சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதியினர். சஞ்சீவ் தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஹீரோவாகவும், ஆல்யா மானசா இனியா தொடரில் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது பிரபலத்தை பயன்படுத்தி இணையத்தில் நூதன மோசடி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அதாவது ஆல்யா சில தினங்களுக்கு ஒரு பேட்டியில் ஆல்யா மானசா தொகுப்பாளர் அஸ்வத்திடம் ஒரு டிரேடிங் கம்பெனியில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று சொல்வதை போலவும், அந்த தொகுப்பாளர் தனக்கு உடனடியாக ஆயிரக்கணக்கில் லாபம் கிடைத்துவிட்டது என்று கூறுவதை போலவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த லைவ் நிகழ்ச்சியை ஆர்பிஐ தலையிட்டு நிறுத்திவிட்டது போலவும் பரபரப்பாக தலைப்பு வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மோசடி குறித்து அறிந்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா உடனடியாக அந்த லிங்கை தங்களது ஸ்டோரியில் வைத்து இது பொய்யான மற்றும் பணமோசடி தொடர்பான செய்தி என எச்சரித்துள்ளனர்.




