'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சின்னத்திரை நடிகர்களில் ஜோடியாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளனர் சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதியினர். சஞ்சீவ் தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஹீரோவாகவும், ஆல்யா மானசா இனியா தொடரில் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது பிரபலத்தை பயன்படுத்தி இணையத்தில் நூதன மோசடி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அதாவது ஆல்யா சில தினங்களுக்கு ஒரு பேட்டியில் ஆல்யா மானசா தொகுப்பாளர் அஸ்வத்திடம் ஒரு டிரேடிங் கம்பெனியில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று சொல்வதை போலவும், அந்த தொகுப்பாளர் தனக்கு உடனடியாக ஆயிரக்கணக்கில் லாபம் கிடைத்துவிட்டது என்று கூறுவதை போலவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த லைவ் நிகழ்ச்சியை ஆர்பிஐ தலையிட்டு நிறுத்திவிட்டது போலவும் பரபரப்பாக தலைப்பு வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மோசடி குறித்து அறிந்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா உடனடியாக அந்த லிங்கை தங்களது ஸ்டோரியில் வைத்து இது பொய்யான மற்றும் பணமோசடி தொடர்பான செய்தி என எச்சரித்துள்ளனர்.