20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
தனியார் அமைப்பு ஒன்று தாதா சாகேப் பால்கேவின் பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கி வருகிறது. அரசு சினிமாவின் உயரிய விருதாக தாதா சாகேப் பால்கே விருது வழங்கி வரும் நிலையில் தனியார் அமைப்பு ஒன்று அதே பெயரில் விருது வழங்குவது குறித்து சர்ச்சை ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் 'ஜவான்' படத்தில் நடித்த ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த நடிகைக்கான விருது அந்த படத்தில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. அதேப்போல் இப்பட இசையமைப்பாளர் அனிருத்திற்கு சிறந்த இசைக்கான விருது வழங்கப்பட்டது.
ஷாரூக்கான் பேசும்போது "நான் சிறந்த நடிகர் விருதுக்கு தகுதியானவன் என என்னை கருதியதற்காக நடுவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். விருதுகளை விரும்புபவன் நான். அதன்மேல் எனக்கு சிறிதளவு பேராசையும் உண்டு" என்றார்.
நயன்தாராவுக்கு வழங்கப்பட்ட விருதுகள் குறித்தும் விமர்சனங்கள் வரத் தொடங்கி உள்ளது.