பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

தனியார் அமைப்பு ஒன்று தாதா சாகேப் பால்கேவின் பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கி வருகிறது. அரசு சினிமாவின் உயரிய விருதாக தாதா சாகேப் பால்கே விருது வழங்கி வரும் நிலையில் தனியார் அமைப்பு ஒன்று அதே பெயரில் விருது வழங்குவது குறித்து சர்ச்சை ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் 'ஜவான்' படத்தில் நடித்த ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த நடிகைக்கான விருது அந்த படத்தில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. அதேப்போல் இப்பட இசையமைப்பாளர் அனிருத்திற்கு சிறந்த இசைக்கான விருது வழங்கப்பட்டது.
ஷாரூக்கான் பேசும்போது "நான் சிறந்த நடிகர் விருதுக்கு தகுதியானவன் என என்னை கருதியதற்காக நடுவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். விருதுகளை விரும்புபவன் நான். அதன்மேல் எனக்கு சிறிதளவு பேராசையும் உண்டு" என்றார்.
நயன்தாராவுக்கு வழங்கப்பட்ட விருதுகள் குறித்தும் விமர்சனங்கள் வரத் தொடங்கி உள்ளது.