'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் |

தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவிலும் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் இளைய மகள் அதிதி, சினிமா நடிகையாக வலம் வருகிறார்.
மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு 2022ல் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் உடன் திருமணம் நடந்தது. இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் பிரமாண்டமாய் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இவர்கள் ஆறு மாதங்கள் கூட சேர்ந்து வாழவில்லை.

ரோஹித்தின் கிரிக்கெட் கிளப்பில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இதில் ரோஹித்தும் குற்றச்சாட்டிற்கு ஆளாக அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இந்த பிரச்னையில் ரோஹித், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்துவிட்டதாக தெரிகிறது. இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு தற்போது மறுமணம் முடிவாகி, நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயமாகி உள்ளது. இவர்களின் போட்டோவை அதிதி தனது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார். விரைவில் திருமணம் நடக்க உள்ளது.