ஆஸ்கருக்கு செல்லும் சூர்யா மகளின் ஆவணப்படம் | இசை அமைப்பாளர் தேவாவிற்கு ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் கவுரவம் | சட்டப்படி வாங்கிய கார்களை திருப்பித்தர வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் துல்கர் மனு | இளையராஜா பாடல்கள் மூலம் சம்பாதித்தது எவ்வளவு? : 'சோனி'யிடம் நீதிமன்றம் கேள்வி | முதல் நாள் வசூல் : இந்திய அளவில் டாப் 10ல் தென்னிந்தியப் படங்கள் | மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி |
தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவிலும் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் இளைய மகள் அதிதி, சினிமா நடிகையாக வலம் வருகிறார்.
மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு 2022ல் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் உடன் திருமணம் நடந்தது. இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் பிரமாண்டமாய் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இவர்கள் ஆறு மாதங்கள் கூட சேர்ந்து வாழவில்லை.
ரோஹித்தின் கிரிக்கெட் கிளப்பில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இதில் ரோஹித்தும் குற்றச்சாட்டிற்கு ஆளாக அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இந்த பிரச்னையில் ரோஹித், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்துவிட்டதாக தெரிகிறது. இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு தற்போது மறுமணம் முடிவாகி, நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயமாகி உள்ளது. இவர்களின் போட்டோவை அதிதி தனது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார். விரைவில் திருமணம் நடக்க உள்ளது.