எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி | பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் |
எஸ்.ஆர்.புரொடக்ஷன் சார்பில் பி.ஜகதீஷ் தயாரிக்கும் படம் 'மெட்ராஸ்காரன்'. 'ரங்கோலி' படத்தின் இயக்குநர் வாலி மோகன்தாஸ் இயக்குகிறார். மலையாள நடிகர் ஷேன் நிகாம் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடித்த நிஹாரிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். இவர்கள் தவிர, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் வாலிமோகன்தாஸ் கூறும்போது, “தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. ரங்கோலி படம் பார்த்துக் கூப்பிட்டார். கதை சொன்ன 5 நிமிடத்தில் இந்தப்படம் செய்ய ஒத்துக் கொண்டார். ஷேன் நிகாமை சந்தித்ததே மறக்க முடியாத அனுபவம், அவர் தமிழில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு நன்றி. ஐஸ்வர்யா தத்தாவால்தான் இந்தப்படம் ஆரம்பித்தது அவருக்கு என் நன்றி. நிஹாரிகாவுக்கு இப்படத்தில் நல்ல கதாப்பாத்திரம். ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.