பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
எஸ்.ஆர்.புரொடக்ஷன் சார்பில் பி.ஜகதீஷ் தயாரிக்கும் படம் 'மெட்ராஸ்காரன்'. 'ரங்கோலி' படத்தின் இயக்குநர் வாலி மோகன்தாஸ் இயக்குகிறார். மலையாள நடிகர் ஷேன் நிகாம் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடித்த நிஹாரிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். இவர்கள் தவிர, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் வாலிமோகன்தாஸ் கூறும்போது, “தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. ரங்கோலி படம் பார்த்துக் கூப்பிட்டார். கதை சொன்ன 5 நிமிடத்தில் இந்தப்படம் செய்ய ஒத்துக் கொண்டார். ஷேன் நிகாமை சந்தித்ததே மறக்க முடியாத அனுபவம், அவர் தமிழில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு நன்றி. ஐஸ்வர்யா தத்தாவால்தான் இந்தப்படம் ஆரம்பித்தது அவருக்கு என் நன்றி. நிஹாரிகாவுக்கு இப்படத்தில் நல்ல கதாப்பாத்திரம். ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.