சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

தமிழில், யாருடா மகேஷ், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கேப்டன் மில்லர் படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன். இவர் நடித்து கடந்த வருடம் வெளியான படம், 'மைக்கேல்'. இதில் விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி, அனுசுயா, திவ்யன்ஷா உட்பட பலர் நடித்தனர். தமிழ், தெலுங்கில் உருவான இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், அதன் தோல்விக்கு காரணம் பற்றி சந்தீப் கிஷன் கூறுகையில், “மைக்கேல் படம் சரியாக ஓடவில்லை. எனக்கும் அந்தப் படத்தின் இறுதி வடிவம் பிடிக்கவில்லை. அதை இயக்குனரிடமே சொன்னேன். எடிட்டிங்கில் ஏதேனும் மேஜிக் நடந்திருந்தால் சிறந்த படமாக வந்திருக்கும். ஆரம்பத்தில் சில காட்சிகளைப் பார்த்தபோது நன்றாக இருந்தது. முழு படமாக அது ஏமாற்றிவிட்டது. அந்தப்படத்தை 3 பேர் தயாரித்தனர். 2 பேர் அது நன்றாக ஓடும் என்று நம்பினர். ஒருவர், ரிலீஸுக்கு 12 நாட்களுக்கு முன், படம் சரியாக இல்லை என்றார். ரிலீஸ் நாள் நெருங்கிவிட்டதால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனாலும் தொழில்நுட்ப ரீதியில் 'மைக்கேல்' சிறந்த படம். அதற்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கதைக்கு கொடுக்க தவறிவிட்டோம்” என்றார்.