திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தமிழில், யாருடா மகேஷ், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கேப்டன் மில்லர் படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன். இவர் நடித்து கடந்த வருடம் வெளியான படம், 'மைக்கேல்'. இதில் விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி, அனுசுயா, திவ்யன்ஷா உட்பட பலர் நடித்தனர். தமிழ், தெலுங்கில் உருவான இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், அதன் தோல்விக்கு காரணம் பற்றி சந்தீப் கிஷன் கூறுகையில், “மைக்கேல் படம் சரியாக ஓடவில்லை. எனக்கும் அந்தப் படத்தின் இறுதி வடிவம் பிடிக்கவில்லை. அதை இயக்குனரிடமே சொன்னேன். எடிட்டிங்கில் ஏதேனும் மேஜிக் நடந்திருந்தால் சிறந்த படமாக வந்திருக்கும். ஆரம்பத்தில் சில காட்சிகளைப் பார்த்தபோது நன்றாக இருந்தது. முழு படமாக அது ஏமாற்றிவிட்டது. அந்தப்படத்தை 3 பேர் தயாரித்தனர். 2 பேர் அது நன்றாக ஓடும் என்று நம்பினர். ஒருவர், ரிலீஸுக்கு 12 நாட்களுக்கு முன், படம் சரியாக இல்லை என்றார். ரிலீஸ் நாள் நெருங்கிவிட்டதால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனாலும் தொழில்நுட்ப ரீதியில் 'மைக்கேல்' சிறந்த படம். அதற்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கதைக்கு கொடுக்க தவறிவிட்டோம்” என்றார்.