கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழில், யாருடா மகேஷ், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கேப்டன் மில்லர் படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன். இவர் நடித்து கடந்த வருடம் வெளியான படம், 'மைக்கேல்'. இதில் விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி, அனுசுயா, திவ்யன்ஷா உட்பட பலர் நடித்தனர். தமிழ், தெலுங்கில் உருவான இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், அதன் தோல்விக்கு காரணம் பற்றி சந்தீப் கிஷன் கூறுகையில், “மைக்கேல் படம் சரியாக ஓடவில்லை. எனக்கும் அந்தப் படத்தின் இறுதி வடிவம் பிடிக்கவில்லை. அதை இயக்குனரிடமே சொன்னேன். எடிட்டிங்கில் ஏதேனும் மேஜிக் நடந்திருந்தால் சிறந்த படமாக வந்திருக்கும். ஆரம்பத்தில் சில காட்சிகளைப் பார்த்தபோது நன்றாக இருந்தது. முழு படமாக அது ஏமாற்றிவிட்டது. அந்தப்படத்தை 3 பேர் தயாரித்தனர். 2 பேர் அது நன்றாக ஓடும் என்று நம்பினர். ஒருவர், ரிலீஸுக்கு 12 நாட்களுக்கு முன், படம் சரியாக இல்லை என்றார். ரிலீஸ் நாள் நெருங்கிவிட்டதால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனாலும் தொழில்நுட்ப ரீதியில் 'மைக்கேல்' சிறந்த படம். அதற்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கதைக்கு கொடுக்க தவறிவிட்டோம்” என்றார்.