ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
தமிழில் களவாணி, முத்துக்கு முத்தாக, மெரினா, மதயானை கூட்டம் உள்பட பல படங்களில் நடித்தவர் ஓவியா. பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது 32 வயதாகும் ஓவியா திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், சிங்கிளாக வாழ்வதிலேயே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொரு துணை இல்லை என்பது எனது எண்ணம்.
திருமணம் என்பது அதற்கான நேரம் வரும்போது தான் அமையும். அதுவாக வந்தால் ஓகே. இல்லை என்றாலும் பரவாயில்லை. நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பேன். யாரிடத்திலும் எதையும் எதிர்பார்க்கவில்லை. சிங்கிளாக வாழ்வதையே நான் மிகவும் விரும்புகிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஓவியா.