என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சின்னத்திரை நடிகை தீபா அண்மையில் இயக்குனர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ப்ரியமான தோழி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து வரும் தீபா, தனது கடந்தகால வாழ்வின் கசப்பான அனுபவங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில், 'நான் 14 வயதிருக்கும் போது சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். தப்பான நபரை 16 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அது மிகவும் தவறாக அமைந்தது. அப்போதெல்லாம் ரேஷனில் அரிசி வாங்கி சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்பட்டேன். திருமணத்திற்கு பிறகு தான் முதல் கணவரின் சுயரூபம் தெரிந்தது. குழந்தையை பெற்றெடுத்த பின் பிழைக்க வழியில்லாமல் குழந்தையை 'அத்திப்பூக்கள்' சீரியலில் நடிக்க வைத்து அந்த காசை வைத்து சாப்பிட்டோம். குழந்தைக்கு 4 வயதாகும் போது தான் நான் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். அதிலும் குழந்தையை ஹாஸ்டலில் விட்டு செல்லும் போதெல்லாம் நான் யாருடனோ ஊர் சுற்றுகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள்' என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.