முத்தையா இயக்கத்தில் பிரபு, கார்த்திக் மகன்கள் | 'மகாராஜா' - விஜய் சேதுபதியின் 50வது படம் தந்த திருப்பம் | லண்டனில் படமாகும் டாக்சிக் | ‛சூரரைப்போற்று' ஹிந்தி ரீ-மேக்கான ‛சர்பிரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மீண்டும் கெட்ட வார்த்தை பேசி ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளான மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | அமீர்கான் மகனின் அறிமுக படத்திற்கு நீதிமன்றம் தடை | ரூ.90 லட்சம் மோசடி நடிகை ஷில்பா மீது வழக்கு | கமலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தலவன் படக்குழு | ரவீனாவுக்கு அடித்த ஜாக்பாட் | எதிர்நீச்சல் குழுவினருக்கு நினைவுப்பரிசு கொடுத்த திருசெல்வம் |
ஸ்ரீ, ஆல்பம் உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான நடிகை ஸ்ருத்திகா. திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஊடக வெளிச்சம் பெற்றார். சினிமா செட்டாகாத காலக்கட்டத்தில் படிப்பை தொடர்ந்த ஸ்ருதிகா, அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில், தன்னுடைய கணவர் குறித்து மிகவும் உருக்கமான பதிவை ஸ்ருதிகா அர்ஜுன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛என்னுடைய சிரிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சிக்கு பின்னால் இருக்கக் கூடிய நபர் இவர்தான். கடவுள் எனக்கு கொடுத்த சிறந்த வரம். என்னுடைய சின்ன சின்ன வெற்றியை கூட பாராட்டி ஆனந்தப்படுவார். பெற்றோர் குழந்தையை பாராட்டுவது போல் இவர் என்னை பாராட்டுவார். மோசமான தருணங்களில் என் மீது அன்பு செலுத்துகிறார். தூண் போல எனக்கு உறுதுணையாக இருக்கிறார். அளவில்லாமல் காதலிப்பது எப்படி என்று இவரிடம் தான் கற்றுக்கொண்டேன். நான் இன்று இந்த இடத்தில் இருக்க இவரே காரணம்'' என தனது கணவர் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.