'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
ரோஜாவனம், ராமகிருஷ்ணா உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர், ஜெய் ஆகாஷ். ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆயுதப்போராட்டம், ஜெய் விஜயம், காதலன் காதலி, காதலுக்கு கண்ணில்லை, உள்பட சில படங்களை இயக்கி நடித்துள்ளார். தற்போது தயாரித்து இயக்கி நடித்துள்ள படம், 'மாமரம்'. கிகி வாலஸ், 'காதல்' சுகுமார், பிரம்மானந்தம், ராகுல் தேவ் நடித்துள்ளனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளர், பாடல்களுக்கு நந்தா இசை அமைத்துள்ளார். சதீஷ் குமார் பின்னணி இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து ஜெய் ஆகாஷ் கூறும்போது “இது எனது சொந்த காதல் கதை. நான் லண்டனில் வசித்தபோது ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்தேன். அவரும் என் மீது உயிராக இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் என்னைவிட வசதியும், புகழும் அதிகம் கொண்ட ஒருவர் கிடைத்ததும் எனது காதலை உதறிவிட்டு சென்று விட்டார். அந்த கதையைத்தான் படமாக எடுத்துள்ளேன்.
அடிப்படையில் அவர் நல்லவர். அதனால் படத்திலும் அவரை நல்லவராக காட்டி இருக்கிறேன். அவரை காதலித்தபோது இருவரும் சேர்ந்து ஒரு மாமர செடியை நட்டு வைத்தோம், அந்த செடி இப்போது மரமாகி இருக்கிறது. அந்த செடியை வைத்ததில் இருந்து படத்தை தொடங்கி இப்போது வரை எனக்கு ஏற்பட்ட நினைவுகளை அவ்வப்போது படமாக்கி இப்போது முடித்திருக்கிறேன்” என்றார்.