‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ரோஜாவனம், ராமகிருஷ்ணா உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர், ஜெய் ஆகாஷ். ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆயுதப்போராட்டம், ஜெய் விஜயம், காதலன் காதலி, காதலுக்கு கண்ணில்லை, உள்பட சில படங்களை இயக்கி நடித்துள்ளார். தற்போது தயாரித்து இயக்கி நடித்துள்ள படம், 'மாமரம்'. கிகி வாலஸ், 'காதல்' சுகுமார், பிரம்மானந்தம், ராகுல் தேவ் நடித்துள்ளனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளர், பாடல்களுக்கு நந்தா இசை அமைத்துள்ளார். சதீஷ் குமார் பின்னணி இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து ஜெய் ஆகாஷ் கூறும்போது “இது எனது சொந்த காதல் கதை. நான் லண்டனில் வசித்தபோது ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்தேன். அவரும் என் மீது உயிராக இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் என்னைவிட வசதியும், புகழும் அதிகம் கொண்ட ஒருவர் கிடைத்ததும் எனது காதலை உதறிவிட்டு சென்று விட்டார். அந்த கதையைத்தான் படமாக எடுத்துள்ளேன்.
அடிப்படையில் அவர் நல்லவர். அதனால் படத்திலும் அவரை நல்லவராக காட்டி இருக்கிறேன். அவரை காதலித்தபோது இருவரும் சேர்ந்து ஒரு மாமர செடியை நட்டு வைத்தோம், அந்த செடி இப்போது மரமாகி இருக்கிறது. அந்த செடியை வைத்ததில் இருந்து படத்தை தொடங்கி இப்போது வரை எனக்கு ஏற்பட்ட நினைவுகளை அவ்வப்போது படமாக்கி இப்போது முடித்திருக்கிறேன்” என்றார்.