45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் 10ம் தேதி வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தின் 50வது நாளை ரசிகர்களுடன் கொண்டாட படக்குழு முடிவு செய்துள்ளது. ஜனவரி 5ம் தேதி சென்னையில் உள்ள திரையரங்கில் அந்த கொண்டாட்டத்தை 99 ரூபாய் டிக்கெட் கட்டணத்துடன் ரசிகர்களை வரவழைத்து கொண்டாட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அதில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கலந்து கொள்ளப் போகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பொதுவாக இப்படியான பட விழாக்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, அல்லது நட்சத்திர ஹோட்டலில் விழா என்றுதான் நடக்கும். ஒரு படம் ஓடி முடிந்த பின் அதன் 50வது நாள் விழாவை இப்படி டிக்கெட் கட்டணம் வசூலித்துக் கொண்டாடுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.