தினமும் நெல்லிக்காய் ஜூஸ், வாரத்துக்கு ஒரு தடவை அரிசி சாதம் : டயட் ரகசியம் சொல்லும் அருண்விஜய் | ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் நோரா பதேகி யார் தெரியுமா? | முதல்வருடன் பாதிக்கப்பட்ட நடிகை சந்திப்பு: பலாத்கார வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை | கேரள திரைப்பட விழாவில் திரையிட 19 படங்களுக்கு மறுப்பு : கேரளா அமைச்சர் காட்டம் | பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியது | பிளாஷ்பேக்: கருணாநிதி படத்தை எதிர்த்து எம்ஜிஆர் போட்ட வழக்கு | திலீப் விஷயத்தில் மோகன்லால் இப்படி செய்யலாமா? : நடிகை கேள்வி | பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே காதல், கல்யாணம், தாயின் மரணத்தை சந்தித்த நடிகை | 'கில்லி' ரீ ரிலீஸ் வசூலை முறியடிக்குமா 'படையப்பா' ? | தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் 10ம் தேதி வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தின் 50வது நாளை ரசிகர்களுடன் கொண்டாட படக்குழு முடிவு செய்துள்ளது. ஜனவரி 5ம் தேதி சென்னையில் உள்ள திரையரங்கில் அந்த கொண்டாட்டத்தை 99 ரூபாய் டிக்கெட் கட்டணத்துடன் ரசிகர்களை வரவழைத்து கொண்டாட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அதில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கலந்து கொள்ளப் போகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பொதுவாக இப்படியான பட விழாக்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, அல்லது நட்சத்திர ஹோட்டலில் விழா என்றுதான் நடக்கும். ஒரு படம் ஓடி முடிந்த பின் அதன் 50வது நாள் விழாவை இப்படி டிக்கெட் கட்டணம் வசூலித்துக் கொண்டாடுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.




