தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு | ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் |

கேப்டன் மில்லர் பட விழாவில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி, வாலிபர் ஒருவரை காலில் விழ வைத்து அடித்து துவைத்த வீடியோ பயங்கரமாக வைரலானது. அதுகுறித்து தற்போது அவரே தனது இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார். அதில், 'அந்த கூட்டத்தில் என்னிடம் ஒருவன் தவறாக நடந்து கொண்டான். உடனடியாக அவனை பிடித்து அடிக்க ஆரம்பித்தேன். அவனை ஓடவிடாமல் பிடித்துக் கொண்டேன். ஒரு பெண்ணின் அங்கத்தை பிடிக்க எப்படி அவனுக்கு அவ்வளவு தைரியம் வந்தது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் கத்தி அவனை தாக்கினேன். என்னை சுற்றி பல நல்ல மனிதர்கள் இருந்தார்கள். இந்த உலகில் நம்மை சுற்றி பல அன்பான மரியாதையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் நம்ம சுற்றி இருக்கும் இதுபோன்ற சில மிருகங்களால் தான் எனக்கு அச்ச உணர்வு உண்டாகிறது' என்று பதிவிட்டுள்ளார்.