வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தற்போது 'டிக் டாக்' படத்தில் ராஜாஜி, சுஷ்மா ராஜேந்திரன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் கடந்த 29ம் தேதி வெளிவந்தது.
தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்த படத்தை தியேட்டரில் சென்று பார்த்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், படத்தில் பிரியங்கா மோகன் நடித்த 20 நிமிட காட்சிகள் மாயமாகி இருந்தன. இதனால் கதை புரியாமல் ரசிகர்கள் தவித்துள்ளனர்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் மதன் குமார், பட ஹீரோ ராஜாஜி படத்தின் டைரக்டர் மதன் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: 'டிக் டாக்' படத்தை கஷ்டப்பட்டு எடுத்து திரைக்கு கொண்டு வந்தோம். இந்த படத்துக்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்கவில்லை. கிடைத்த பல தியேட்டர்களில் 20 நிமிடம் 42 நொடிகள் ஓடும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரியங்கா மோகன் இதில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள், அவரது பாடல் காட்சிகள் உள்பட 4வது ரீல் படத்தில் இல்லை. இது பற்றி படத்தில் பணியாற்றிய டிஎஸ்ஆர் கியூப் நிறுவனத்திடம் பேசினோம். இது தொழில்நுட்ப கோளாறு என சாதாரணமாக கூறுகிறார்கள். அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ள பிரியாங்கா மோகன் முதலில் நடித்த படம் 'டிக் டாக்' சில ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்த படம் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அவர் படுக்கை அறை காட்சியில் நடித்துள்ளார். தனக்கு இப்போதிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவர் தான் நடித்த காட்சிகளை நீக்க செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.




