ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
கிட்டத்தட்ட 49 படங்களில் நடித்து முடித்து விட்ட நடிகர் தனுஷ் ஏற்கனவே 'ப பாண்டி' என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் மாறினார். அதன்பிறகு சிறிய இடைவெளிவிட்டு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதோடு தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இதற்கு பெயரிட்டுள்ளனர்.
தனுஷின் இயக்கம் பற்றி நடிகர் எஸ்.ஜே..சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், “அவரு சூப்பர் டைரக்டரும் கூட... தனுஷுக்கு டைரக்ஷன் மேல என்ன வெறி ! என்ன அர்ப்பணிப்பு ! அவர் வேற லெவல். தனுஷ் 50வது படத்தின் கதையும் வித்தியாசமான ட்ரீட்மென்ட்டும் சர்வதேச தரத்தில் இருக்கிறது. அவரது 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்கும் ஆல் த பெஸ்ட் என்று கூறியுள்ளார்.