உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? |
தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று அந்த ரசிகர்களைக் கவர்ந்து கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகைகள் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் வகிதா ரகுமான், ஹேமமாலினி, ஸ்ரீதேவி ஆகியோர் குறிப்பிட வேண்டியவர்கள். ஸ்ரீதேவிக்குப் பிறகு தீபிகா படுகோனே பிரபலமானாலும் அவரால் கனவுக்கன்னி என்ற அளவிற்கெல்லாம் போக முடியவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம் இரண்டு தென்னிந்திய நடிகைகள் பாலிவுட் ரசிகர்களை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். 'ஜவான்' படத்தில் அறிமுகமான நயன்தாரா, 'அனிமல்' படத்தில் நடித்த ராஷ்மிகா தான் அந்த இருவர். நயன்தாரா தமிழில் நம்பர் 1 இடத்தில் இருந்தாலும் ஹிந்தியில் இந்த வருடம்தான் அறிமுகமானார். ராஷ்மிகா மந்தனா இதற்கு முன்பு 'குட்பை, மிஷன் மஞ்சு' ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் அவருக்குக் குறிப்பிடும்படியாக அமையவில்லை. ஆனால், 'அனிமல்' படம் அவருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்துவிட்டது.
நயன்தாரா, ராஷ்மிகா இருவரும் அடுத்து வேறு எந்த ஹிந்திப் படங்களிலும் நடிப்பதற்கு இதுவரை சம்மதிக்கவில்லை. நயன்தாரா தமிழ்ப் படங்களிலும், ராஷ்மிகா தெலுங்குப் படங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள்.