அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று அந்த ரசிகர்களைக் கவர்ந்து கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகைகள் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் வகிதா ரகுமான், ஹேமமாலினி, ஸ்ரீதேவி ஆகியோர் குறிப்பிட வேண்டியவர்கள். ஸ்ரீதேவிக்குப் பிறகு தீபிகா படுகோனே பிரபலமானாலும் அவரால் கனவுக்கன்னி என்ற அளவிற்கெல்லாம் போக முடியவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம் இரண்டு தென்னிந்திய நடிகைகள் பாலிவுட் ரசிகர்களை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். 'ஜவான்' படத்தில் அறிமுகமான நயன்தாரா, 'அனிமல்' படத்தில் நடித்த ராஷ்மிகா தான் அந்த இருவர். நயன்தாரா தமிழில் நம்பர் 1 இடத்தில் இருந்தாலும் ஹிந்தியில் இந்த வருடம்தான் அறிமுகமானார். ராஷ்மிகா மந்தனா இதற்கு முன்பு 'குட்பை, மிஷன் மஞ்சு' ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் அவருக்குக் குறிப்பிடும்படியாக அமையவில்லை. ஆனால், 'அனிமல்' படம் அவருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்துவிட்டது.
நயன்தாரா, ராஷ்மிகா இருவரும் அடுத்து வேறு எந்த ஹிந்திப் படங்களிலும் நடிப்பதற்கு இதுவரை சம்மதிக்கவில்லை. நயன்தாரா தமிழ்ப் படங்களிலும், ராஷ்மிகா தெலுங்குப் படங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள்.