மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
நடிகை த்ரிஷாவை ஆபாசமாக பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. த்ரிஷாவுக்கு ஆதரவாக குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்தனர். இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்டார் மன்சூர் அலிகான். இதை த்ரிஷாவும் ஏற்றுக் கொண்டார்.
இந்த பிரச்னை இதோடு முடியும் என்றும் பார்த்தால் தன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை, ஐகோர்ட்டில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார் மன்சூர் அலிகான். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மன்சூர் அலிகான், தொடர்ச்சியாக சர்ச்சை செயல்களில் ஈடுபடுகிறார். எந்த தவறும் செய்யவில்லை என தற்போது கூறும் அவர், கைது நடவடிக்கைகளில் தப்பிக்கவா மன்னிப்பு கோரினார்? இந்த விஷயத்தில் த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுறுத்துங்கள் என நீதிபதி கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.