இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' | பிளாஷ்பேக்: பெண் உளவாளியாக நடித்த முதல் நடிகை | 72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு உயில் எழுதி வைத்த 62 வயது ரசிகை | மீண்டும் ஒரு நாய் படம் |
நேஷனல் கிரஷ் என்கிற அடைமொழியுடன் குறுகிய காலத்திலேயே தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை புகழ் பெற்று விட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் என்கிற படத்தில் நடித்துள்ளார். டிச., 1ல் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பட நிகழ்ச்சியில் ராஷ்மிகா பற்றி நடிகர் மகேஷ்பாபு குறிப்பிட்டு பேசும்போது, தன்னுடன் நடித்த ராஷ்மிகா தற்போது அனைத்து மொழிகளிலும் நடிக்கும் அளவிற்கு எவ்வளவு பெரிய நடிகையாக வளர்ந்து விட்டார் என்று சிலாகித்து கூறினார். மேலும் இனி ராஷ்மிகா நடிப்பதற்காக ஒரு புதிய மொழியை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்றும் கூறி கலாட்டா செய்தார்.