நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக தற்போது சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் இருக்கிறார். நேற்று இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு வந்து சங்கத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை 22 லட்சம் வரை மோசடி நடந்துள்ளதாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது : தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் கடந்த 55 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 2018ம் ஆண்டு முதல் இந்த சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, நான் செயல்பட்டு வருகிறேன். சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் சங்க உறுப்பினர்களை ஏமாற்றி பணம் கையாடலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் போலியான சங்கம் ஒன்றை ஆரம்பித்து, தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டனர். அவர்கள் போட்டி சங்கம் நடத்துவதற்கும், உண்மையான சங்கத்தின் பெயரை பயன்படுத்துவதற்கும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, உரிய தடை ஆணை பெறப்பட்டுள்ளது.
ஆனால் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். போலியான ஆவணங்களை காட்டி, தொடர்ந்து சங்க உறுப்பினர்களிடம் பணத்தை பெற்று, சங்கத்தின் கணக்கு உள்ள வங்கியில் செலுத்தாமல், லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். உறுப்பினர்கள் கட்டிய பணத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டதாக வங்கி பெயரிலும் போலியான ரசீதுகளை தயாரித்து கொடுத்து ஏமாற்றி உள்ளனர். 22 லட்சம் அளவுக்கு அவர்கள் மோசடி செய்தது, ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் உண்மையான கணக்கில் 6 கோடி பணம் உள்ளது. அந்த பணத்தையும் மோசடி செய்யும் நோக்கில் செயல்படுகிறார்கள். சங்க ஊழியர்களையும், உறுப்பினர்களையும் மிரட்டி தொல்லை கொடுக்கிறார்கள். எனக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே உரிய விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, சங்கம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் ஜாக்குவார்தங்கம் தெரிவித்துள்ளார்.