'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபல யு டியூப்பர் வாசன். பைக் ரைடில் சாகசம் செய்து அதை யு டியூபில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் புகழ்பெற்றவர். தற்போது 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் சென்னை - வேலூர் சாலையில் வீலிங் செய்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரின் கை எலும்பு முறிந்தது. போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான வாசன் சிறை வாசலில் நிருபர்களிடம் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்னை திருத்துவதற்காக அல்ல. என் வாழ்க்கையை அழிப்பதற்காக செய்த மாதிரி இருக்கிறது. எனது கை முறிந்தது பற்றி கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை அறிந்தபோது அழுதேன். ஆனால் நான் கட்டாயம் பைக் ஓட்டுவேன்.
எனது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வேன். சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெற்று மீண்டும் வாகனம் ஓட்டுவேன். திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன். என்னை பார்த்து குழந்தைகள், சிறுவர்கள் கெட்டுப்போகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை நான் ஏற்க மாட்டேன். வித்தியாசமாக எதை பார்த்தாலும் அவர்கள் ஈர்க்கப்படுவது இயற்கையே. பெற்றோர்கள்தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
நான் என்ன கிரிமினல் குற்றவாளியா? எதற்காக என்னுடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரியவில்லை. இதுவரை நான் நேபாளம் மட்டுமே சென்றுள்ளேன். உலகம் முழுக்க செல்ல வேண்டும் என்பது என் கனவு.
இவ்வாறு அவர் கூறினார்.