ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

விஜய்யின் லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் படத்தின் நாயகி த்ரிஷா பேசியதாவது : ‛‛லியோ படத்தின் கதையை 2 ஆண்டுகளுக்கு முன்பே லோகேஷ் கனகராஜ் சொன்னார். இரண்டரை மணி நேரம் அவர் சொன்ன கதை எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்போது அந்த கதையை எப்படி சொன்னாரோ அதையேதான் இப்போதும் எடுத்தார்.
விஜய்யோடு நான் நடித்தது மறக்க முடியாத அனுபவம். பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் உணர்ந்தேன். எனது கேரியரில் நான் அதிகம் பயணப்பட்டது விஜய்யோடு தான். அவரது அமைதிதான் அவரது வெற்றிக்கு காரணம்.
என்னை சந்திப்பவர்கள், சமூக வலைத்தளங்களில் என்னோடு தொடர்பில் இருப்பவர்கள் விஜய்யுடன் எப்போது மீண்டும் நடிப்பீர்கள் என்று கேட்டு கொண்டே இருந்தனர். இப்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் நடித்திருக்கிறோம். அதுவும் ஒர் அவுட் ஆகியிருக்கு. நடிகைகளுக்கு அப் அண்ட் டவுன் இருக்கும். எல்லா நேரத்திலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் அப்படி இருப்பது தான் நிலைத்து நிற்பதற்கும் காரணம்,'' என்றார்.