50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! | ஹிந்தி ஆடியன்சை குறி வைக்கும் நாகசைதன்யா- சாய் பல்லவியின் தண்டேல்! | ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 | அஜித்துக்கு பத்மபூஷண்…. வாழ்த்துவதில் ஏன் பாரபட்சம்…. | பிளாஷ்பேக்: சாதுர்யமிக்க இயக்கத்தால் சாதனை படைத்த “சாந்த சக்குபாய்” | விஜய்யின் கடைசி படம் ‛ஜனநாயகன்': பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | ‛‛நீங்க எல்லாரும் இல்லாம விருது கிடைத்திருக்காது'': பத்ம பூஷன் விருது பெற்றி ஷோபனா நெகிழ்ச்சி | ‛மஜா' பட இயக்குனர் ஷபி மறைவு |
யுவராஜ் தயாளன் இயக்கத்தில், விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்ணதி, ஸ்ரீ, சானியா ஐயப்பன் மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 6ம் தேதி வெளிவந்த படம் 'இறுகப்பற்று'. அன்றைய தினம் வெளியான 9 படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் மட்டுமே தாக்குப் பிடித்து இன்று 25வது நாளைக் கடந்திருக்கிறது.
இது குறித்து படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான விக்ரம் பிரபு, “நன்றி, நன்றி, நன்றி... இறுகப்பற்று படத்திற்குக் கிடைத்த அன்பு… 4 வாரங்களைக் கடந்தும் தியேட்டர்களில் இருப்பதும் எங்கள் குழுவினருக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இது தியேட்டர்களில் மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கான செயல்பாட்டில் மக்களுக்குச் செய்த விதத்திலும் கிடைத்த வெற்றி. இது போன்ற படங்கள் மில்லியனில் ஒன்று. அதை உங்கள் அனைவருக்கும் கொண்டு வந்த இந்த அற்புதமான குழுவில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்… நன்றியுடன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் நடித்த 'லியோ' படம் வெளிவந்த பின்னும் இந்தப் படம், தியேட்டர்களில் எந்தவிதமான சத்தமும் ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது போன்ற படங்களுக்கு வசூல் முக்கியமல்ல, மக்களின் வரவேற்பே முக்கியம்.