நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பள்ளி பருவத்தில் வருவது காதல் அல்ல, அது இன கவர்ச்சி எனவே பள்ளி மாணவர்கள் காதலிப்பது போன்றும், டூயட் பாடுவது போன்றும் படங்களில் காட்சி வைக்க கூடாது என்று பொதுவான கருத்து உள்ளது. ஆனால் அதையும் மீறி அவ்வப்போது பள்ளி பருவ காதல் படங்கள் வெளிவரத்தான் செய்கிறது. சமீபத்தில் வெளிவந்த 'மார்கழி திங்கள்' படத்திலும் பள்ளி பருவ காதல்தான் கதை களமாக இருந்தது.
தற்போது ஆதிராஜன் இயக்கி வரும் நினைவெல்லாம் நீயடா படமும் பள்ளி பருவ காதலை களமாக கொண்டிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தில் பிரஜன் கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் ஆதிராஜன் கூறியதாவது : பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. பழனி பாரதி பாடலை எழுத, கார்த்தி பாடியுள்ளார். தீனா நடன வடிவமைப்பில் உருவான இந்த பாடல் காட்சியில் பள்ளி மாணவ மாணவிகளாக நடிக்கும் ரோகித், யுவலட்சுமி ஜோடி நடித்துள்ளனர். என்கிறார் ஆதிராஜன்.