என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
பள்ளி பருவத்தில் வருவது காதல் அல்ல, அது இன கவர்ச்சி எனவே பள்ளி மாணவர்கள் காதலிப்பது போன்றும், டூயட் பாடுவது போன்றும் படங்களில் காட்சி வைக்க கூடாது என்று பொதுவான கருத்து உள்ளது. ஆனால் அதையும் மீறி அவ்வப்போது பள்ளி பருவ காதல் படங்கள் வெளிவரத்தான் செய்கிறது. சமீபத்தில் வெளிவந்த 'மார்கழி திங்கள்' படத்திலும் பள்ளி பருவ காதல்தான் கதை களமாக இருந்தது.
தற்போது ஆதிராஜன் இயக்கி வரும் நினைவெல்லாம் நீயடா படமும் பள்ளி பருவ காதலை களமாக கொண்டிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தில் பிரஜன் கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் ஆதிராஜன் கூறியதாவது : பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. பழனி பாரதி பாடலை எழுத, கார்த்தி பாடியுள்ளார். தீனா நடன வடிவமைப்பில் உருவான இந்த பாடல் காட்சியில் பள்ளி மாணவ மாணவிகளாக நடிக்கும் ரோகித், யுவலட்சுமி ஜோடி நடித்துள்ளனர். என்கிறார் ஆதிராஜன்.