துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாக்கியலெட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் வில்லன், ஹீரோ, காமெடியன் என கலக்கி வருகிறார் நடிகர் சதீஷ். இவருக்கென தற்போது தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சதீஷ் அடிக்கடி ஏதாவது அப்டேட் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது சீரியல் ஒன்றின் புரோமோவை வெளியிட்டுள்ள அவர், 'நான் மிகவும் ஆசையுடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் நடிக்க ஒப்புக்கொண்ட ரோல். ஆனால், எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றத்தில் தான் முடியும் என்ற பாடத்தை வாழ்க்கை மீண்டும் எனக்கு கற்பித்துள்ளது. நாம் என்னதான் சிறப்பாக செயல் செய்தாலும் அதை அழிப்பதற்கு சில பேர் காத்துக்கொண்டிருப்பார்கள். நண்பர்களே இது தான் உண்மை. வாழ்க்கை தத்துவம்' என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பாக்கியலெட்சுமி தொடரில் சதீஷ் சிறப்பாக நடித்து வருவதை கூறி அவருக்கு இதை விட பல நல்ல ப்ராஜெக்ட்டுகள் கிடைக்கும் என வாழ்த்தி வருகின்றனர்.