கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
பாலிவுட்டில் கடந்த வருடம் வெளியான காஷ்மீர் பைல்ஸ் என்கிற படத்தின் மூலம் பரபரப்பான இயக்குனராக மாறியவர் விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி. தொண்ணூறுகளின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.. அதனாலேயே பாலிவுட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இந்தப்படம் வரவேற்பைப் பெற்றது. அரசியல் அரங்கிலும் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது இரண்டாவது படமாக 'தி வேக்ஸின் வார்' என்கிற படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் முதல் படம் ஏற்படுத்திய தாக்கத்தில் அதற்கு கிடைத்த வரவேற்பு 10 சதவீதத்தை கூட இந்த படம் பெறவில்லை. இந்த நிலையில் சூட்டோடு சூடாக தனது மூன்றாவது படத்தில் வேலைகளில் இறங்கி விட்டார் விவேக் அக்னிஹோத்ரி.
இந்த படத்திற்கு பர்வா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரபல கன்னட எழுத்தாளர் எஸ்.எல் பைரப்பா எழுதிய பர்வா என்கிற நாவலை தழுவியே இந்த படம் உருவாக இருக்கிறது. மகாபாரதத்தில் இடம் பெற்ற முக்கியமான கதாபாத்திரங்களின் தனிப்பட்ட குணாதிஷயங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருக்கிறது. குறிப்பாக இந்த படம் மூன்று பாகங்களாக தயாராக உள்ளது.