அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். அவர் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நேற்று டில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார்.
அதே போல, அதே படத்திற்காக சிறந்த பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் பெற்றார். அல்லு அர்ஜுன், தேவிஸ்ரீபிரசாத் இருவரும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள். அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் தற்போது வசிக்க, தேவிஸ்ரீபிரசாத் சென்னையில்தான் இன்னமும் வசித்து வருகிறார்.
நேற்று தேசிய விருது பெற்ற பிறகு தேவிஸ்ரீபிரசாத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் புகைப்படங்களைப் பகிர்ந்து அல்லு அர்ஜுன், “எனது பால்ய நண்பர், எனது இசையமைப்பாளர், எனது நலம் விரும்பி, எனது உற்சாகத் தலைவருடன் சேர்ந்து பெற்றது மறக்க முடியாத நிகழ்வு. முதல் முறையாக இருவரும் ஒன்றாக சேர்ந்து பெற்றது மிக்க மகிழ்ச்சி. சென்னை சாலைகளிலிருந்து, டில்லி அரங்கு வரை… இது ஒரு 25 வருடப் பயணம்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.