'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? |
விஜய் நடித்துள்ள 'லியோ' படத்திற்கு அக்டோபர் 19ம் தேதி முதல் அக்டோபர் 24ம் தேதி வரை தியேட்டர்களில் தினமும் 5 காட்சிகளைத் திரையிட அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், சிலர் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என பொய்யான தகவலைப் பரப்பினர். நேற்று பேசிய தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் காலை 9 மணிக்கு காட்சிகளை ஆரம்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
அக்டோபர் 20ம் தேதி காலை 9 மணி காட்சியிலிருந்து மட்டுமே பல தியேட்டர்கள் முன்பதிவுகளை ஆரம்பித்தன. படம் வெளியாகும் நாளுக்கான முன்பதிவுகளை ஆரம்பிக்கவில்லை. இந்நிலையில் புதிய அரசு ஆணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், “அனைத்து தியேட்டர்களும் ஒரு சிறப்புக் காட்சியை நடத்தலாம். காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் காட்சிகள் நள்ளிரவில் 1.30 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும்,” எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் காலை 8 மணி காட்சிகளை நடத்த முடியாது.
கடந்த முறை வெளியிட்ட அரசு ஆணையில் விஜய்யை 'தளபதி விஜய்' எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிய ஆணையில் வெறும் 'லியோ' படம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.