2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகை திவ்ய பிரபா. 'லோக்பால்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு மும்பை போலீஸ், சிம், பையா பையா, நான்சென்ஸ், நிழல், மாலிக், அரியிப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கயல், கோடியில் ஒருவன் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் விமான பயணம் மேற்கொண்டபோது பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி உள்ளார். இதுகுறித்து அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் எழுதியிருப்பதாவது : சமீபத்தில் மும்பையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் சென்றேன். விமானத்தில் இருந்த சக பயணி ஒருவர் குடிபோதையில் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதுதொடர்பாக அங்குள்ள விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தபோது அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் நான் தொடர்ந்து புகார் செய்து கொண்டே இருந்ததால், எனது இருக்கையை மட்டும் மாற்றிவிட்டு சென்றனர். கொச்சி வந்ததும் விமான நிலைய அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தேன். கேரள போலீசாருக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளேன்.
இந்த விஷயத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. என்று எழுதியுள்ளார்.