சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் 'லியோ'. இதில் சஞ்சய்தத், அர்ஜூன், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது. 'லியோ' படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் ஆடிய நடன கலைஞர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக லியோ படத்தில் பங்கேற்ற நடன கலைஞர்கள் ஏராளமானோர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுவில் “சில மாதங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 'லியோ' படத்தில் இடம்பெறும் 'நான் ரெடி தான் வரவா...' பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடனமாட 7 நாட்களுக்கு 22 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டது. ஆனால் தற்போது எங்களுக்கு சம்பளமாக தலா 7 ஆயிரம் மட்டுமே வழங்கியுள்ளனர். வேலை முடிந்ததும் உரிய சம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள்" என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''லியோ படத்தின் பாடல் காட்சிக்கு 2 ஆயிரத்துக்கு மேற்றபட்ட நடன கலைஞர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் நடன கலைஞர்கள் சங்கத்தில் ஆயிரம் பேர் மட்டுமே உறுப்பினர்கள். அதிலும் 400 கலைஞர்கள் வெவ்வேறு படங்களில் பணியாற்றினார்கள். இதனால் சங்க உறுப்பினர்கள் 600 பேர் தவிர மீதம் தேவைப்படுவோருக்கு உறுப்பினர் அல்லாத நடன கலைஞர்கள் பாடல் காட்சியில் பயன்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 1750 ரூபாய் வீதம் 6 நாட்களுக்கு 10,500 ரூபாய் சம்பளம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது'' என்று தெரிவித்துள்ளார்.