சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு | காதலர் பிரிவுக்கு பின் மீண்டும் சினிமாவில் முழு வேகத்தில் தமன்னா | மகன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் 'லியோ'. இதில் சஞ்சய்தத், அர்ஜூன், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது. 'லியோ' படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் ஆடிய நடன கலைஞர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக லியோ படத்தில் பங்கேற்ற நடன கலைஞர்கள் ஏராளமானோர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுவில் “சில மாதங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 'லியோ' படத்தில் இடம்பெறும் 'நான் ரெடி தான் வரவா...' பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடனமாட 7 நாட்களுக்கு 22 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டது. ஆனால் தற்போது எங்களுக்கு சம்பளமாக தலா 7 ஆயிரம் மட்டுமே வழங்கியுள்ளனர். வேலை முடிந்ததும் உரிய சம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள்" என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''லியோ படத்தின் பாடல் காட்சிக்கு 2 ஆயிரத்துக்கு மேற்றபட்ட நடன கலைஞர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் நடன கலைஞர்கள் சங்கத்தில் ஆயிரம் பேர் மட்டுமே உறுப்பினர்கள். அதிலும் 400 கலைஞர்கள் வெவ்வேறு படங்களில் பணியாற்றினார்கள். இதனால் சங்க உறுப்பினர்கள் 600 பேர் தவிர மீதம் தேவைப்படுவோருக்கு உறுப்பினர் அல்லாத நடன கலைஞர்கள் பாடல் காட்சியில் பயன்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 1750 ரூபாய் வீதம் 6 நாட்களுக்கு 10,500 ரூபாய் சம்பளம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது'' என்று தெரிவித்துள்ளார்.