காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. அது குறித்த டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று லியோ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார், லியோ படத்தின் இசை விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு சமீபத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்டது போன்ற குளறுபடி ஏற்பட்டு விடக்கூடாது மற்றும் அரசியல் அழுத்தம் போன்ற காரணங்கள் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்த நேரத்தில் லியோ படத்தின் ஆடியோ விழா ரத்தானதால் விஜய்யின் ரசிகர்கள் மிகப்பெரிய கொந்தளிப்புக்கு ஆளாகி உள்ளார்கள். இதற்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் கொடுத்தபோதும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. லியோ ஆடியோ விழா ரத்தானதின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே கருதுகிறார்கள். அதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள். அதில், ‛ஆடியோ லான்ச் இல்லைன்னா என்ன, ஆட்சிய புடிச்சிட்டா போச்சி' என்ற வாசகங்களுடன் போஸ்டரை வெளியிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.