அப்போ தெரியலையா? வனிதாவை வெளுத்து வாங்கிய கஸ்தூரி | கார் விபத்தில் சிக்கிய ஜி.பி.முத்து : வருத்தத்தில் வெளியிட்ட வீடியோ | 17 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் சுஹாசினி படம் | முனியாண்டியின் முனி பாய்ச்சல் | ஊழலுக்கு எதிராக நிஜ வாழ்க்கையிலும் நிற்க முன்வர வேண்டும் : விஷால் | விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை : மருத்துவமனை அறிக்கை | வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவருக்கு நிறைய படங்கள் வரிசையில் உள்ளதால் அவர் இசையமைக்க மறுத்துள்ளார். அதன் பிறகு தேவிஸ்ரீ பிரசாத், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்திற்கு இசையமைக்க கே.ஜி.எப் படம் மூலம் பிரபலமான ரவி பசூர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.