நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவருக்கு நிறைய படங்கள் வரிசையில் உள்ளதால் அவர் இசையமைக்க மறுத்துள்ளார். அதன் பிறகு தேவிஸ்ரீ பிரசாத், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்திற்கு இசையமைக்க கே.ஜி.எப் படம் மூலம் பிரபலமான ரவி பசூர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.